அநுர அரசால் என்னை கைது செய்ய முடியாது என்கிறார் பிள்ளையான்!

Must read

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் இரண்டாவது நாளாகவும் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட காணொளி தொகுப்பு ஒன்றில் பிள்ளையான் முன்னாள் செயலாளரான அசாத் மௌலானா என்பவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

அதில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானுக்கும், ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய தாக்குதல் தாரிகளுக்கும் தொடர்பு இருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் அவர் வெளிப்படுத்திய இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் இரண்டாவது நாளாகவும் இன்று (22) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே நேற்று முன்தினம் (20) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான பிள்ளையான் , சுமார் 5 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

இந்தநிலையில் மேலதிக வாக்குமூலம் பெறுவதற்காக இன்று முற்பகல் 9 மணியளவில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article