நாரஹேன்பிட்டியில் உள்ள அரசாங்க வெளியீட்டு அலுவலகத்தின் விற்பனை பிரிவு இம்மாதம் 15 ஆம் திகதி மூடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனினும், மறுநாள் செவ்வாய்க்கிழமை (16) வழக்கம்போல் அரச வெளியீட்டு விற்பனை நிலையம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு நடவடிக்கை
இதனை அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (10) அறிவித்துள்ளது.
மேலும் கையிருப்பு மற்றும் சில உள் பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.