பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனிப்பட்ட பாவனைக்கான கார்களை இறக்குமதி செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர திசாநாயக்க பாராளுமன்றத்தில் இன்று (18) தெரிவித்தார்.
“இதனால் மீண்டும் டொலர் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்பதில் சந்தேகம் வேண்டாம், மத்திய வங்கியுடன் நீண்ட நாட்களாக விவாதித்து, வெளியேறும் டொலர்களை புரிந்து கொண்டு இதைச் செய்கிறோம் என்றும் அவர் கூறினார்.
வாகனச் சந்தையை கடுமையான ஸ்திரத்தன்மையுடன் திறக்க வேண்டும் என்பதற்காக நாம் அர்ப்பணிப்பாகச் செயற்பட்டோம்” என்றும் ஜனாதிபதி கூறினார்.