இலங்கை – நியூசிலாந்து ஒருநாள் போட்டியை மழை தடுத்தது!

Must read

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, நியூசிலாந்து அணி 21 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து 112 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடிய போது போட்டியில் மழை குறுக்கிட்டது.

இதனையடுத்து மழை தொடர்ச்சியாக பெய்து வருவதால் போட்டியை கைவிட நடுவர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதையடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article