அமெரிக்க தேர்தல் பரப்புரையின் போது டொனால்டு ட்ரம்ப் பலமுறை உக்ரைன் போர் தொடர்பில் தமது கருத்தை பதிவு செய்து வந்தார். ஜனாதிபதியாக பொறுப்புக்கு வந்ததன் 24 மணி நேரத்தில் உக்ரைன் போரினை முடிவுக்கு கொண்டுவருவேன் என்றும் ட்ரம்ப் வெளிப்படையாக பேசியிருந்தார்.
ஆனால், அவரது ஆலோசகர்கள் தற்போது போர் முடிவுக்கு கொண்டுவர பல மாதங்கள் ஆகும் என்று ஒப்புக்கொள்கிறார்கள். இந்த நிலையில், திங்கட்கிழமை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ட்ரம்ப், டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் காணொளி இணைப்பு மூலம் உரையாற்றினார்.
அதில், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக விரைவில் ஜனாதிபதி புடினைச் சந்திக்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். அது பொருளாதாரம் சார்ந்தது அல்ல. மில்லியன் கணக்கான உயிர்கள் வீணடிக்கப்படுவதைப் பற்றிய கவலை.