கனடாவில் இணைய வழி மோசடிகள் வெகுவாக அதிகரித்து வருகின்றமை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற குறிப்பாக 12 விதமான மோசடிச் செயற்பாடுகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொருட்கள் கொள்வனவு மற்றும் விற்பனை செய்பவர்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இணைய வழியூடாக விளம்பரம் செய்து விற்பனை செய்யும் போது அதிக அளவிலான கொள்ளைச் சம்பவங்களும் மோசடிகளும் இடம் பெறுவதாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டு மாதங்களில் இவ்வாறான கொள்ளை மற்றும் மோசடி சம்பவங்கள் தொடர்பில் கூடுதல் முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக கனடிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சில சந்தர்ப்பங்களில் கத்தி முனையில் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது., இதுவரையில் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்ட எவரும் கைது செய்யப்படவில்லை என்பதால் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென கனடிய பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.