கனேடியர் கொலையுடன் இந்திய பிரதமரை இணைத்து தகவல் வெளியிட்ட அதிகாரிகளை கடுமையாக விமர்சித்த கனடா பிரதமர்

Must read

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்டதை இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொடர்பு வைத்து தகவல் வெளியிட்ட அதிகாரிகளை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையின் பின்னணியில் இந்தியா இடம்பெற்றதாகக் கூறி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிவிப்புக்கு பிறகு, இந்தியா மற்றும் கனடா இடையே தூதரக உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதன் பின்னர், நவம்பர் 20ஆம் தேதி Globe and Mail பத்திரிகையில், இந்த கொலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருடன் இணைத்து செய்தி வெளியிடப்பட்டது.

இந்த தகவலைத் தொடர்ந்து, கனடா அரசு அதன் உடன்பாட்டை மறுத்தது. கனடாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஆலோசகர் நதாலி ஜி. ட்ரூயின், “இந்த குற்றச்செயல்களுடன் இந்திய பிரதமர், வெளியுறவு அமைச்சர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகருக்கு தொடர்பு இருப்பதாக எதற்கும் ஆதாரம் இல்லை,” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையை இந்திய பிரதமருடன் இணைத்து செய்தி வெளியிட்ட அதிகாரிகளை கடுமையாக சாடினார். “உச்ச ரகசிய தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட்டவர்கள் கிரிமினல்களாகும்,” என்று அவர் கூறினார். மேலும், அவை தவறான செய்திகளாக இருக்கிறதையும், அந்த அதிகாரிகள் தொடர்ந்து தவறான தகவல்களை வழங்கி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன் மூலம், ட்ரூடோ அரசின் இடையே வெளிநாட்டு தலையீடு தொடர்பாக விசாரணை மேற்கொள்வதாகவும், அந்த அதிகாரிகள் ஊடகங்களுக்கு லீக் செய்த தகவல்களே நம்பத்தகாதவை என நிரூபிக்கப்பட்டதாகவும் கூறினார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article