காலி சிறைச்சாலையில் 540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல்…

Must read

காலி சிறைச்சாலையில் இவ்வருடம் இதுவரையில் 540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புதிய அரசாங்கத்தின் முதலாவது காலி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் காலி மாவட்ட செயலகத்தில் தொழிற்கல்வி பிரதியமைச்சர் நளின் ஹேவகே தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டது.

கையடக்கத் தொலைபேசிகள் கடத்தலுக்கு சிறைச்சாலை அமைந்திருந்த இடம் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதாக காலி சிறைச்சாலையின் பிரதி பிரதான சிறைச்சாலை அதிகாரி தனுஷ்க புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

மேலும் கூட்டத்தில் பேசிய காலி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் சேரம், சுவருக்கு மேல் வலை மற்றும் சிசிரிவி அமைப்பை பொருத்துவதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இருப்பினும், சுற்றியுள்ள பகுதி அரசு நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் இது கடினமாக உள்ளதால் இந்த பணிகளை 2025இல் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article