ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் கடந்த 31ம் தேதி திரைக்கு வந்த படம் அமரன். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்திருந்தார்.
மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று 300 கோடிக்கு மேல் வசூலித்து இருக்கிறது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தை சேர்ந்த அதிகாரிகள், சிவகார்த்திகேயனை அழைத்து கவுரவித்துள்ளார்கள்.
அதோடு, மேஜர் முகுந்த் வரதராஜனாகவே அமரன் படத்தில் அவர் வாழ்ந்திருப்பதாக வாழ்த்தி பாராட்டி உள்ளார்கள். இந்த தகவலை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது