ரொறன்ரோவில் எதிர்வரும் 2025ம் ஆண்டில் வீடுகளின் விலைகள் கனிசமாக உயர்வடையக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
டொறன்ரோவின் பெரும்பாக பகுதியில் இவ்வாறு வீடுகளின் விலைகள் உயர்வடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
றோயல் லீபேஜ் நிறுவனம் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த வருடத்தின் நான்காம் காலாண்டு பகுதியில் வீடுகளின் விலைகள் ஐந்து வீதத்தினால் அதிகரிக்கும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.