பகிரங்க மன்னிப்பு கோரிய MP அர்ச்சுனா!

Must read

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, 10வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் தவறாக அமர்ந்தார். இதனால் பரபரப்பான நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, இன்று (25) நடைபெற்ற திசைமுகப்படுத்தல் செயலமர்வில் அவர் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டார்.

அவர் கூறியதாவது, “நான் எங்கு அமர வேண்டும் என்று கேட்டபோது, அவர்கள் என்னிடம் மறுபுறம் போய் உட்கார என்று சொன்னார்கள். எனவே, எங்கு வேண்டுமானாலும் அமரலாம் என்று நினைத்தேன். என் பழக்கப்படி, எங்கு அமருவது மற்றும் எப்படிச் செல்லது என எனக்கு சரியாகத் தெரியவில்லை. நான் சுயேட்சையாக வந்ததால், தவறுதலாக அந்த இடத்தில் அமர்ந்தேன்.”

அவரின் தவறுக்கு ஊடகங்களில் பலர் விமர்சனம் செய்ததையும், அவர் “புலி” என்று அழைக்கப்பட்டதைப் பற்றி இராமநாதன் அர்ச்சுனா வருத்தம் வெளியிட்டார். “நான் எதிர்க்கட்சித் தலைவர் நாற்காலியில் புலியாக அமர்ந்துள்ளேன் என்ற விமர்சனம் எனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நான் யாரையும் துறக்கவில்லை, தவறுதலாக அந்த இடத்தில் அமர்ந்தேன்,” என அவர் கூறினார்.

இறுதியில், இராமநாதன் அர்ச்சுனா, “என் தவறுக்காக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தவறாக நடந்து விட்டேன். மன்னிக்கவும்,” என கூறி, தன்னுடைய பரிதாபத்தை வெளிப்படுத்தினார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article