பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்துள்ளதால் அந்நாட்டில் ஆட்சி கவிழ்ந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்க்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 577 பேரில் 331 பேர் பார்னியர் அரசுக்கு எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் பிரான்சில் ஆட்சி கவிழ்ந்துள்ளது.
மேலும், இது ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகின்றது.
மேலும், பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரனும் பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.