யாழ். சட்டத்தரணி வீட்டில் திருட்டு – இருவர் கைது

Must read

யாழ். நல்லூர் பகுதியில் சட்டத்தரணியொருவரின் வீட்டில் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பொருட்களை திருடிய இருவர் யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண் சட்டத்தரணி ஒருவர் வீட்டிலிருந்து நகை மற்றும் பொருட்கள் காணமல் போனதாக செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய யாழ். உதவி பொலிஸ் அத்தியட்சர் எம்.எஸ்.ஜரூலின் வழிகாட்டலில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சமன் பிறேமதிலக தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட விசாரணையின்போதே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சட்டத்தரணி வீட்டில் இல்லாத நேரம் குறித்த வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்யும் பெண் சந்தேக நபருக்கு வழங்கிய தகவலுக்கமைய குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article