யாழ். வைத்தியசாலைக்குள் MP அர்ச்சுனாவின் அட்டகாசம்

Must read

யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீண்டும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு வருவது குழப்பம் விளைவிக்குமாயின், அவர் வாசலிலேயே பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் எனத் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இதனைச் சொல்லி, சுகாதார பிரிவில் எந்தவிதமான குழப்பமும் ஏற்படக் கூடாது என வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி குறித்து பேசிக்கொண்டிருக்கும் போதே, தன்னை “சேர்” என்று அழைக்க வேண்டும் எனக் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக, அவர் சேர் என்றழைக்கப்பட முடியாது என்று பதிலளித்ததில், அர்ச்சுனா எச்சரிக்கை செய்தார். அவர், “நான் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியில் இருந்து அகற்றுவேன், நாடாளுமன்றத்திற்கு அழைத்து கேள்வி கேட்பேன்” என கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, அவர் தனது செயல்களால் எந்தவொரு குழப்பமும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என, வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article