மொட்டுக் கட்சியின் விசேட கூட்டத்தில் வெளியிடப்படவுள்ள அறிவிப்பு!

Must read

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (Sri Lanka Podujana Peramuna) கட்சியின் சார்பில் களமிறங்கவிருக்கும் வேட்பாளர் தொடர்பில் கட்சியின் விசேட கூட்டத்தில் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த கூட்டமானது நாளைய தினம் (09.04.2024) இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீர்க்கமான முடிவுகள்
இதன்போது, ஜனாதிபதித் தேர்தல், மே தினக் கூட்டம் மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் ஆராய்ந்து, தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது

மேலும், கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கட்சியின் நிறுவுனர் பசில் ராஜபக்ச மற்றும் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article