குளிர் காயும் போது தீயில் கருகி முதியவர் பலி!

Must read

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் தீயில் சிக்கி முதியவர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன் உயிரிழந்தவர் சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த 75 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குளிர் காரணமாக வீட்டில் எரிந்த தீ பரவியதாலேயே இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article