யாழில் கைதான குடும்பஸ்தரிடம் கடும் விசாரணை!

Must read

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தரை எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மாவீரர் நாட்களில் நடந்த சம்பவம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை இணுவில் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய குடும்பஸ்தரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தரை யாழில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அலுவலகத்தில் சுமார் 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முன்னெடுத்திருந்தனர்.

இதனையடுத்து இன்றையதினம் (01-12-2024) யாழ்ப்பாண நீதவான் முன்னிலையில் முற்படுத்தினர்.

அதனையடுத்து நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் (04-12-2024) ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article