பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர் கொழும்பில் அதிரடியாக கைது

Must read

பிரித்தானியாவிலிருந்து தீவிரவாத அமைப்புக்கு பணம் வசூலித்ததாக பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவர் புலம்பெயர் தமிழர் வீடுகளுக்கான விசாரணை நடவடிக்கையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் 2009-ஆம் ஆண்டில் இலங்கையை விட்டு பிரித்தானிய குடியுரிமை பெற்றவர் மற்றும் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 43 வயதுடையவர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், சேகரித்த பணத்தை கொழும்பு மற்றும் வன்னி பிரதேசங்களில் விநியோகித்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த சந்தேக நபர், கொழும்பு வடக்கு குற்றப் பிரிவினரால் பயணத் தடை உத்தரவுடன் வன்னி பிரதேசத்தில் நடைபெற்ற விசாரணைகளின் போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

மேலும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் விமான நிலைய பொலிஸாரும், கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article