ஆல்பர்ட்டா மாகாண பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது பாலியல் குற்றச்சாட்டு

Must read

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது இரண்டு பாலியல் குற்றச்செயல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹோட்டல் அறை ஒன்றில் தங்கி இருந்த சிலர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.

ஹோட்டலில் இருந்தவர்கள் மீது இந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களை மேற்கொண்டார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்த வழக்கு எதிர்வரும் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாக உள்ளார்.

கொன்ஸ்டபில் பிரிட்ஜெட் மோர்லா என்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக இவ்வாறு பாலியல் குற்றச் செயல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article