கனடாவில் மிகவும் தேடப்பட்டு வரும் நபர்கள் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கனடா முழுவதும் தேடப்பட்டு வரும் 25 நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல், டொறன்ரோ பெரும்பாக பகுதியில் தேடப்பட்டு வரும் நபர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த பட்டியலில் ஐந்து பேர் புதிதாக இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் 10 பேர் டொறன்ரோ பெரும்பாக பகுதி பொலிஸாரினால் தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
போதைப் பொருள் கடத்தல் படுகொலை சம்பவங்கள் என பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு தேடப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு தேடப்பட்டு வரும் பலர் தலைமறைவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.