கனேடிய எண்ணெய், எரிவாயு, ஆட்டோக்கள் அல்லது மரக்கட்டைகளை தமது நாடு இறக்குமதி செய்யத் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், எங்கள் கார்களைத் தயாரிக்க கனேடியர்களின் உதவி எங்களுக்குத் தேவையில்லை, அவர்களே அவற்றை அதிகமாக உருவாக்குகிறார்கள். எங்களுக்குச் சொந்தமாக காடுகள் இருப்பதால் அவர்களின் மரக்கட்டைகள் எங்களுக்குத் தேவையில்லை என்றார்.
கனேடியர்களின் எண்ணெய் மற்றும் எரிவாயுவும் எங்களுக்குத் தேவையில்லை, தேவைக்கும் அதிகமாக எங்களிடம் உள்ளது என்றார். கனேடிய ஏற்றுமதிகளை அமெரிக்கா நிறுத்தினால், அது இரு நாடுகளுக்கும் இடையே நிறுவப்பட்ட வர்த்தக உறவை சீர்குலைக்கும் என்றே கூறப்படுகிறது.