கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசி.
உத்பன்ன அல்லது உற்பத்தி ஏகாதசி.
உத்பன்ன ஏகாதசி இதனை உற்பத்தி ஏகா தசி என்றும் அழைப்பர். இதுவே உலகில் தோன்றி ய முதல் ஏகாதசி. எனவே இது இந்தப் பெயர் பெற்றது.
இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு அவரு டைய வேண்டுதலின் பெயரில் இந் த விரதம் தோன்றிய கதையைபற்றி எடுத்துரைக்கிறா ர். அதை நாமும் காண்போம்.
சத்யயுகத்தில், சந்திராவதி எனும் நகரத் தை தலைநகரமாக கொண்டு, முரன் என்றொரு பயங்கரமான ராட்சசன் வாழ்ந்து வந்தான். இந்திரன் முதலிய தேவர்களை வென்று இந்திர பதவியை பறித்துக்கொ ண்டு தேவர்க ளை சுவர்க்கத்தை விட்டு விரட்டியடித்து மக்க ளை மிகவும் துன்புறு த்தி வந்தான்.
அவனது கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் அனைவரும் பூமியில் மறைந் து வாழ்ந்து வந்தனர். பின்னர், இன்னும் எவ்வள வு காலம் தான் இவ்வாறு ஒளிந்து வாழ்வது ? இதற்கொரு முடிவே கிடையாதா ? என்று எண்ணி இத்துன்பத்திலிருந் து விடுபடத் தகுந்த உபாயம் கூறி தங்க ளைக் காக்கும்படி அனைவரும் மகாதேவ ரை சரணடைந்தனர்.
அதனைக் கேட்ட மகாதேவர், “தேவர்களே, நீங்கள் அனைவரும் பாற்கடலில் உறையு ம் ஜகத்ரட்சகனாகிய இறைவன் ஸ்ரீஹரி யை சரணடையுங்கள். அவர் நிச்சயம் உங் களைக் காத்தருள்வார்..” என்று திருவாய் மலர்ந்தருளினார்.
அதனைக் கேட்ட தேவர்கள் அனைவரும், ஆதி சேஷன் மேல் யோகநித்திரையில் உறையும் இறைவன் ஸ்ரீஹரி வசிக்கும் பாற்கடலுக்கு சென்று அவரைப் பலவாறாகப் போற்றி துதித் தனர். அதனைக் கேட்ட இறைவன் ஸ்ரீஹரி, தேவர்களின் வருத்தத்திற்கு காரணத்தைக் கேட்டார்.
” நாராயணா, முன்னொரு காலத்தில் பிரம்ம தேவரின் குலத்தில் தோன்றிய நாடீஜங்கன் என்னும் கொடிய அரக்கனின் மகனே இந்த முரன் என்னும் அசுரன். இவ ன் அதீத பலம் கொண்டு விளங்குவதால், தேவர்களாகிய எங்களை தேவலோகத்திலிருந்து விரட்டியடி த்து விட்டு, அசுரர்க ளை இந்திரன், வருணன், அக்னி, யமன் என லோகபாலகர்களாக நியமி த்து விட்டான். மேலும் அவனே சூரியனாகி பூமியைத் தகிப்பதோடு, அவனே மழை மேகமாகி மழை பொழிகிறான்.
இப்படியாகத் தேவர்களாகிய எங்களைத் துன்புறுத்தியதோடு மட்டுமின்றி, ஜகத்தின் சமநிலையை குலைக்கிறான். எனவே இவனிடமிருந்து உலகையும், எங்களையும் காத்து இரட்சிக்க வேண்டும் பிரபோ, என்று தேவர்கள் அனைவரும் அவரை வேண்டினர்.
இதனைக் கேட்ட இறைவன் ஸ்ரீஹரி வெகுண் டெழுந்து, தேவர்கள் அனைவரையும் தனது தலைமையில் அழைத்துக் கொண் டு சந்திரா வதி பட்டினத்தின் மீது தாக்குதல் தொடுக்கச் சென்றனர். இதனையறிந்த முரனும், அவர்க ளோடு போர் புரியத் துவங்கினான்.
இறைவன் ஸ்ரீஹரி, தனது சக்ராயுதத்தினால் அசுரர்களின் அஸ்திர வித்தைகளையும், மாயா ஜாலங்களையும் நாசம் செய்தார். அவனது வீரர்கள் அனைவரும் மடிவது கண்டு சற்றும் கலக்கமடையாமல் இறைவனோடு பயங்கரமாக போர் செய் து கொண்டிருந்தான் அவனைஅழிக்க இறைவன் தொடுத்த அனை த்து அஸ்திரங்களையும், தகர்த்தெறிந்தான்.
அனைத்து விதமான அஸ்திர பிரயோகங்களு க்குப் பிறகும், பகவானால் அவனை வெல்ல முடியவில்லை. எனவே பகவான் அவனுடன் மல்யுத்தத்தில் ஈடுபட்டார். இறைவன் ஸ்ரீஹரி தேவர்களுக்காக அவனுடன் 1000 ஆண்டுகள் விடாமல் போர் புரிந்து கொண்டிருந்தார்.
இடைவிடாது நிகழ்ந்த போரின் காரணமாக மிகவும் களைப்புற்றவராய் பகவான் சாந்தத் துடன் சிறிது ஓய்வெடுக்க வேண்டி பத்ரிகா ஸ்ரமத்தில் 28 கஜ தூரம் கொண்ட ஒரு துவா ரத்துடன் கூடிய ஹேம வதி என்னும் பெயர் கொண்ட குகையில் சென்று சயனத்தில் ஆழ்ந்தார்.
முரனும் அந்தக் குகையில் நுழைந்தான். பக வான் சயனித்திருப்பதைக் கண்டு அவரைக் கொல்ல ஆயத்தமானான். அவனுடைய எண் ணம் ஸ்ரீஹரியை கொன்று விட்டால், காலம் முழுவதும் நாம் எந்த எதிரி பயமுமின்றி வாழ லாம் என்பதி லேயே இருந்தது.
ஆனால் அவனது எண்ணம் நிறைவேறவில் லை. முரன் வாளை உருவி பகவானை கொ ல்ல நெருங்கிய போது, அவருடைய தேகத்தி லிருந்து திவ்யவஸ்திரங்களுடன், சகல ஆயுத ங்களோடும் அதி அற்புத மான அழகுடன் கூடிய ஒரு மங்கை தோன்றினாள். இத்தனை பலசாலியான, அழகான மங்கை திடீரென எங்கிருந்து தோன்றி னாள் என்றெண்ணிக் கொண்டிருக்கும் போதே, அவள் ஓங்கார சப்த கர்ஜனை யோடு அவனுடன் ஆவேசமாகப் போர் புரியத் தொடங்கினாள்.
சிறிதுநேரம் அஸ்திரங்களை பிரயோகித்தா ன் முரன். அத்தனையையும் தூள் தூளாக்கி னாள். அவனது ரதத்தை உடைத்தெறிந்தாள். அதனைக் கண்டு ஆத்திரமடைந்த முரன் யுத்த நியதிகளை விடுத்து பெண் என்றும் பாராமல் அவளுட ன் மல்யுத்தத்தில் ஈடுபட ஆக்ரோஷ மாக அவளை நோக்கி ஓடி வந்தான். ஆனால் அந்த மங்கை அவன் ஓடி வந்த வேகத்திலே யே, அவனது சிரத்தைக் கொய்து மண்ணில் வீசி அவனை யமலோகத்திற்கு அனுப்பி வைத்தாள்.
விழித்தெழுந்த பகவான், தரையில் கிடந்த முரனின் உடலைப் பார்த்து இவ்வளவு பலசா லியை கொன்றது யாராக இருக்கக் கூடும் என்று எண்ணிய வேளையில், அந்த மங்கை அங்கே வந்து இறைவனை வணங்கி, பிரபோ, இந்தக் கொடிய அரக்க ன், தாங்கள் சயனித்தி ருந்த வேளையில் தங்களைக் கொல்ல முற்ப ட்டதையடுத்து, அவனுடைய எண்ணத்தை அறிந்தவளாய், மூவுலகையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இவனை உங்களது மகா சக்தியான நான் தங்கள் சரீரத்திலிருந்து தோன்றி வதைத்தேன் என்று கூறி கரம் கூப்பி நின்றாள்.
அதைக் கேட்ட ஸ்ரீஹரி, மங்கையே, உனது இந்த செயலால் நான் மட்டுமின்றி மூவுலகும் இன்று ஆனந்தம் அடைந்திருக்கிறது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எனவே நீ வேண்டும் வரம் எதுவாயினும் கேள். அது எப்பேர்ப்பட்ட வரமாயி னும் அதனைப் பூர்த்தி செய்கிறேன் என்றார்,
அதை கேட்டு மகிழ்ந்த அந்த மங்கை, “நாராய ணா, நீங்கள் எனது செயல் கண்டு மகிழ்ந்து வரமளிக்க விரும்பினால், தாங்கள் எனக்கு அளப்பரிய சக்தியை வழங்குங்கள். அதாவது, தேவரோ, அசுரரோ, மனிதரோ, மிருகமோ, பிராணியோ, பட்சி யோ எவரொரு வர் நான் தோன்றிய இந் நாளில் விரதம் அனுஷ்டிக்கி ன்றாரோ, அவர்களுடைய பாவங்கள் அனைத் தையும் அழிக்க வல்ல சக்தியை வழங்குங்கள்..” என்றாள்.
“மேலும், எவரொருவர் இந்நாளில் விரதம் அனு ஷ்டிக்கிறாரோ, அவர் பாவங்கள் அனை த்தும் நீங்கி இறுதியில் சுவர்க்கப் பிராப்தி அடைய வேண்டும். அது போல, இந்நாளில் முழு உபவாசம் இருந்து பூஜிப்பவரின் பலனி ல் பாதி பலனை இரவில் மட்டும் கண் விழிப் பவ ருக்கும், ஒரு வேளை மட்டும் உணவு உண்பவ ருக்கும் வழங்க வேண்டும் என்றாள். முழு உபவா சம் கொள்பவர் வாழ்வில் அனை த்துச் சுக போகங்களையும் அடைந்து இறுதி யில் பல கற்பங்கள் விஷ்ணுலோகத்தில் வாழும் பேற்றினைப் பெற வேண்டும்..” என்றாள்.
அதனைக் கேட்ட இறைவன் ஸ்ரீஹரி மிகவு ம் மனமகிழ்ந்து, “ஹே கல்யாணி, ஜகத்தி ன் நன்மை கருதி நீ கேட்ட இந்த வரத்தி னை நினைத்து நான் மிக்கமகிழ்ச்சி அடை ந்தேன். எனவே நீ கோரியபடியே அந்த வர த்தினை உனக்கு அளிக்கிறேன். இன்று முதல் எனது பக்தர்கள் அனைவரும் எனத ருளை எளிமை யாகப் பெற இந்த விரதத் தினை அனுஷ்டிப் பார்கள..” என்றார்.
அத்துடன், நீ 11ஆம் நாள் தோன்றியதால் உலகத்தோரால் இன்று முதல் நீ ஏகாதசி என அழைக்கப் பெறுவாய் என்றருளினார். எனக்குப் பிரியமான திதிகளான திரிதி யை, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி ஆகிய திதிகளின் வரிசையில் நீ உயர்ந்த இடத் தை அடைந்து என்றும் என் மனதுக்கு பிரி யமான திதியாகப் புகழ் பெற்று விளங்கு வாய் என்று கூறி மறைந்தார்.
இவ்வாறாகக் கூறிய பகவான் ஸ்ரீகிருஷ்ணர், விரதத்தை 12ஆம் நாளான துவாதசி நாளன்!று இறைவனை வணங்கி விரதத்தை நிறைவு செய்வோர் அஸ்வமேதயாக பலனை அடைவ தோடு சகலபுண்ணிய தீர்த்தங்களில் மூழ்கிய பலனையும் அடைவர் என்றார்.
மேலும் எவரொருவர் இந்நாளைப் பற்றிக் கேட்கிறாரோ அல்லதுசொல்கிறாரோ, அவர் இறுதியில் விஷ்ணுலோகத்தை அடைவர் என்று பவிஷ்யோத்ர புராணம் விவரிக்கின்றது
ஓம் நமோ நாராயணாய…
26.11.2024… நேசமுடன் விஜயராகவன்….