ஐரோப்பிய நாடான பெலரூஸில் சிக்கிய லொக்குபெட்டி எனும், சுஜீவ ருவன் குமாரவை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் பொலிஸ் ஊடகப்பேச்சாளாரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார்.
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான லொக்குபெட்டி, பெலரூஸில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், லொக்குபெட்டி தொடர்பில் பல போலியான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இலங்கையில் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள லொக்குபெட்டியை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெலரூஸின் நாடு கடத்தல் சட்டத்தை பயன்படுத்தி லொக்குபெட்டியை இலங்கைக்கு அழைத்து வர குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.