கடலில் மூழ்கி 15 வயது சிறுவன் மாயம்!

Must read

அம்பாறை(Ampara) பொத்துவில் பகுதியில் சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனே இன்று(20.04.2024) இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

குறித்த சிறுவன் கடலில் நீராடிக்கொண்டிருக்கும் போது திடீரென நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிறுவனை தேடும் பணி
இதையடுத்துப் பொலிஸார், கடற்படையினர், உயிர்காக்கும் பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல்போன சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கடலில் மூழ்கி

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article