முதல்வர் ஸ்டாலின் அதானியை சந்திக்கவில்லை – அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகிறார்

Must read

தொழில​திபர் அதானியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தது போலவும், அதிக விலை கொடுத்து அதானி​யிடம் இருந்து சூரிய ஒளி மின்​சாரம் பெற ஒப்பந்தம் போட்​டிருப்பது போலவும் தொடர்ந்து எதிர்க்​கட்​சிகளும், ஊடகங்​களும் கற்பனையான கதை கூறுகின்றன.

தமிழக முதல்வர் அதானியைச் சந்திக்​க​வும் இல்லை. அதானி நிறு​வனத்​துடன் நேரடியாக சூரிய ஒளி மின்​சாரம் பெற எந்த ஒப்பந்தமும் போடவும் இல்லை என்பதே உண்மையாகும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.முதல்வர் அதானியை சந்திக்கல... பொய்யை பரப்பினால் சட்ட நடவடிக்கை! – அமைச்சர்  செந்தில்பாலாஜி

பிற மாநிலங்​களைச் சேர்ந்த மின்சார சபைகளைப் போல தமிழ்​நாடு மின்சார சபையும் மத்திய அரசின் சோலார் எனர்ஜி கோர்ப்​பரேஷன் ஒப் இந்தியா நிறு​வனத்​துடன் மட்டுமே மின்​சாரம் கொள்​முதல் செய்து வருகிறது.

எனவே, மத்திய அரசால் கட்டாய​மாக்​கப்​பட்​டுள்ள மரபுசாரா கொள்​முதல் இலக்​குகளை அடைவதற்​கு, தமிழ்​நாடு மின்சார ஒழுங்​கு​முறை ஆணையத்​தின் ஒப்புதல் பெற்று செய்​யப்​பட்ட ஒப்பந்​தங்​களாகும். இதில், எவ்வித முறை​கேடும், விதி​முறை மீறல்​களும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article