யாருமில்லா வீட்டில் இளைஞனுடன் மோசமான செயலில் ஈடுபட்ட யுவதி!

Must read

பாணந்துறை பின்வத்தை பகுதியில் தனியார் நிறுவனமொன்றின் சிரேஷ்ட நிர்வாக உத்தியோகத்தரின் வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிய இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிர்வாக உத்தியோகத்தர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் யுவதி பின்வத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள்
கைதான பெண் , நிர்வாக உத்தியோகத்தர் வீட்டிலிருந்து சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களைத் திருடியுள்ளார்.

அம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணே இந்த மோசாமான செயலை செய்ததுடன், சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.

யுவதி மற்றுமொரு இளைஞனுடன் இணைந்து நிர்வாக உத்தியோகத்தர் வீட்டிற்குள் ஜன்னல் வழியாக நுழைந்து பொருட்களைத் திருடியுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் பின்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article